சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி - அரசாங்கம் சொல்லும் காரணம்
இலங்கையில் இருந்து சீனாவுக்கு குரங்குகள் ஏற்றுமதி செய்யப்படுவது இனப்பெருக்க நோக்கத்திற்காக மட்டுமே என கமத்தொழில் அமைச்சு செயலாளர் குணதாச சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சீனாவின் விலங்குகள் இனப்பெருக்க நிறுவனம் என்ற ஒரு நிறுவனம் 100,000 டோக் குரங்குகளைக் கேட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தொடக்கப்பட்ட கருத்துக்களம்
எனவே அந்த கோரிக்கையை நடைமுறைப்படுத்துவதற்காக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்களைக் கேட்க அமைச்சு ஒரு கருத்துக்களத்தை தொடங்கியுள்ளது.
சுற்றாடல் ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள், சுற்றுலாத்துறை அமைச்சு, மதத் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் இந்த குரங்கு ஏற்றுமதி தொடர்பில் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
குரங்குகள் சீனாவுக்கு ஏற்றுமதி
“நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் சிறந்த யோசனைகள் கருத்துக்களை சேகரிப்பதைக் கொண்டு, குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் அமைச்சு தீர்மானம் மேற்கொள்ளும்”.
“ பெருமளவிலான பயிர்கள் நாசம் செய்யப்படும் பிரதேசங்களிலிருந்து குரங்குகளை அப்புறப்படுத்த அமைச்சு எதிர்பார்த்திருக்கிறது. மாறாக காடுகளிலிருந்தும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலிருந்தும் குரங்குகளை அப்புறப்படுத்துவது நோக்கமல்ல” என அவர் மேலும் தெரிவித்தார்.
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)