எச்சரிக்கை மட்டத்தில் உள்ள மொரகஹகந்த நீர்த்தேக்கம்!
நாட்டில் தற்போது நிலவி வரும் பாதகமான வானிலை மற்றும் மத்திய மாகாணத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மொரகஹகந்த நீர்த்தேக்கம் தற்போது 10 மீட்டர் ஆக உள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் பெய்யும் மழையால் நீர்த்தேக்கம் நிரம்பி வழியக்கூடும் எனவும் பதில் பொறியாளர் பி.எஸ். பண்டார தெரிவித்தார்.
அறிக்கை
இலங்கை மகாவலி அதிகாரசபையின் செயல் பொறியாளர் பி.எஸ். பண்டார அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின்படி, மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் மொத்த நீர் சதவீதம் 99.46 வீதம் ஆகும்.
அம்பன் நதி வழியாக நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்பட்டால், கீழ் பள்ளத்தாக்குகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு மேலே அமைந்துள்ள போவதென்ன நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டால், அம்பன் நதியில் பாயும் நீர் மட்டம் அதிகரிக்கும் எனவும் எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அறிக்கைகள் மேலும் தெரிவிக்கின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |