பிள்ளையானின் துப்பாக்கிதாரி தொடர்பில் மேலும் முக்கிய தகவல்கள்!

CID - Sri Lanka Police Batticaloa Pillayan Sri Lanka Police Investigation
By Dharu Aug 14, 2025 07:54 AM GMT
Report

முன்னாள், இராஜாங்க அமைச்சர் சிவனேநத்துரை சந்திரகாந்தனால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளின், முக்கிய துப்பாக்கி சூடு நடாத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் நேற்று மட்டக்களப்பில் வைத்து அதிரடியாக கைதுசெய்யப்பட்டார்.

பிள்ளையானின் சகாவான முகமட் ஷாகித் என்பவரே இவ்வாறு நேற்று மட்டக்களப்பு - காத்தான்குடியில் அவரது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்படு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சிஜடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த ஏப்பிரல் 7ஆம் திகதி சிஜடியினர் கைது செய்தனர்.

மைத்திரி அரசாங்க அமைச்சருக்கு உயர் பதவி! விரைவில் அரசாங்கத்துடன் கைகோர்ப்பு

மைத்திரி அரசாங்க அமைச்சருக்கு உயர் பதவி! விரைவில் அரசாங்கத்துடன் கைகோர்ப்பு

முகமட் ஷாகித்

அவரிடம் தொடர்ந்து இடம்பெற்றுவரும் விசாரணையையடுத்து காத்தான்குடியைச் சேர்ந்தவரும் கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் இருந்து பிள்ளையானுடன் செயற்பட்ட 45 வயதுடைய முகமட் ஷாகித்தை சம்பவதினமான நேற்று புதன்கிழமை மாலை அவரது வீட்டில் வைத்து கொழும்பில் இருந்து சென்ற சிஜடியினர் கைது செய்திருந்தனர்.

 இதேவேளை கைது செய்யப்பட்வர் கடந்த 2024 ஜுன் 17 ஆம் திகதி காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியில் உள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த பெண்ணிடம் தங்க ஆபரணங்களை கொள்ளையடிப்பதற்காக கை துப்பாக்கியால் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

பிள்ளையானின் துப்பாக்கிதாரி தொடர்பில் மேலும் முக்கிய தகவல்கள்! | More Important Information About Pillayan S Gunman

இதனையடுத்து அவரை பொலிஸார் கைது செய்து 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்த நிலையில் அவரிடமிருந்து அந்த கைதுப்பாக்கியை மீட்கமுடியாத நிலை காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்துடன் பல குற்றச் செயல்கள் தொடர்பில் இவர் மீது பல முறைப்பாடுகள் காணப்படுவதாக கூறப்படுகிறது.

அத்தோடு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கருணா - பிள்ளையான் அணியின் முக்கியஸ்தருமான இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஷ்பகுமார் என்பவரிடம் மேற்கொள்ளப்படும் சி.ஐ.டி விசாரணையில் பல விடயங்கள் அம்பலமாகியுள்ளதாக அறிய முடிகிறது.

மக்களை ஏமாற்றும் தமிழ் அரசுக்கட்சியின் கதவடைப்பு போராட்டம்! அநுர அரப்பு ஆதங்கம்

மக்களை ஏமாற்றும் தமிழ் அரசுக்கட்சியின் கதவடைப்பு போராட்டம்! அநுர அரப்பு ஆதங்கம்

கடத்தல்கள், கொலைகள்

2025 ஜூலை 6 அன்று அதிகாலை அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில், முனைக்காடு பகுதியில் உள்ள அவரது வீட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டார்.

இந்தக் கைது, 2005 முதல் 2009 வரையிலான காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கடத்தல்கள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், சட்டவிரோத ஆயுதப் பயன்பாடு, மிரட்டி பணம் பறித்தல், சித்திரவதைக் கூடங்கள் நடத்துதல் போன்ற குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

இனிய பாரதியின் கைது இனிய பாரதியின் கைது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் (சிவநேசதுரை சந்திரகாந்தன்) வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் நடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையானின் துப்பாக்கிதாரி தொடர்பில் மேலும் முக்கிய தகவல்கள்! | More Important Information About Pillayan S Gunman

பிள்ளையான், 2025 ஏப்ரல் 8 அன்று பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இனிய பாரதிக்கு எதிராக அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் அவர் 2025 ஜூலை 9 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, 2006 முதல் 2009 வரை அம்பாறை, திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளில் ஏழு பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் அவர் தொடர்புபடுத்தப்பட்டுள்ளார்.

இதுதவிர, இனிய பாரதியின் சாரதியாக 2007-2009 காலப்பகுதியில் பணியாற்றிய செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ், 2025 ஜூலை 7 அன்று கல்முனை பிரதான பேருந்து நிலையம் அருகே கைது செய்யப்பட்டார்.

இதன் தொடர்ச்சியாக மற்றொரு சகாவான தொப்பிமனாப் என அழைக்கப்படும் சின்னத்தம்பி விக்கினேஸ்வரன், முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர், 2025 ஜூலை 27 அன்று கைது செய்யப்பட்டு கொழும்புக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

முன்னாள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மக்களிடத்தில்! காவல்துறைமா அதிபர் விசேட நடவடிக்கை

முன்னாள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மக்களிடத்தில்! காவல்துறைமா அதிபர் விசேட நடவடிக்கை

இனிய பாரதியின் காரியாலயம்

குறிப்பிடத்தக்க வகையில், இனிய பாரதியின் காரியாலயம் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் அவரது குழுவால் இயக்கப்பட்ட முகாம்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சந்தேகத்திற்குரிய இடங்களை அகழ்ந்து ஆய்வு செய்ய நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு வருகிறது.

மேலும், இனிய பாரதி மீதான குற்றச்சாட்டுகளில், அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமாரின் படுகொலை உட்பட பல சம்பவங்கள் அடங்கும்.

பிள்ளையானின் துப்பாக்கிதாரி தொடர்பில் மேலும் முக்கிய தகவல்கள்! | More Important Information About Pillayan S Gunman

இவர் மீது முன்பு கல்முனை நீதிமன்றத்தில் 10 ஆண்டு ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும், 164 கிலோ கேரளா கஞ்சா கடத்திய வழக்கில் கைதாகி விடுதலையான சம்பவங்களும் காணப்படுகின்றன.

இனிய பாரதி கைதின் பின்னணியில் , கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள பாரிய வீட்டை முற்றுகையிட்டதோடு ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை இரண்டு வெவ்வேறு ஜீப் வண்டிகளில் அழைத்து வந்து சோதனையிட்டனர்.

இதன் பின்னர் சம்மாந்துறையில் செயற்பட்ட முகாம் உட்பட அந்த கால பகுதியில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் டி.எம்.வி. பி முகாம்களாக செயற்பட்டவற்றை சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

சர்ச்சைக்குரிய மன்னார் காற்றாலை திட்டம் - ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

சர்ச்சைக்குரிய மன்னார் காற்றாலை திட்டம் - ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவு

அடையாளப்படுத்தப்பட்ட பகுதி

அங்கு சந்தேகத்துக்கு இடமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலத்தை தோண்டி சோதனையிடுவதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை குற்றப்புலனாய்வுத்துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு, 2005 மற்றும் 2008க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குறித்து நீண்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

பிள்ளையானின் துப்பாக்கிதாரி தொடர்பில் மேலும் முக்கிய தகவல்கள்! | More Important Information About Pillayan S Gunman

குறித்த விசாரணையில், முதல் சந்தேக நபரான இனியபாரதி 2004ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணா பிரிவின் திருக்கோவில் பகுதியில் உள்ள ஆயுதமேந்திய முகாமின் தலைவராகப் பணியாற்றியவராவார்.

இவர் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் கருணா பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சியின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று பிள்ளையானின் துப்பாக்கிதாரி எனப்படும், சந்தேகநபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்லைப்பிட்டி 3ம் வட்டாரம், Jaffna, Ivry-sur-Seine, France

12 Jan, 2022
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Herning, Denmark, London, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, India, Toronto, Canada

25 Dec, 2025
மரண அறிவித்தல்

சிங்கப்பூர், Singapore, Sangarathai, மானிப்பாய், நெதர்லாந்து, Netherlands, ஜேர்மனி, Germany

23 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி கிழக்கு, East Gwillimbury, Canada

27 Dec, 2025
மரண அறிவித்தல்

வேப்பங்குளம், கோவில் புதுக்குளம்

27 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வெள்ளவத்தை, Freiburg, Germany

23 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உமையாள்புரம்

26 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

29 Dec, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Toronto, Canada

07 Jan, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Ottawa, Canada, Markham, Canada

27 Dec, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், அவுஸ்திரேலியா, Australia

29 Dec, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனகராயன்குளம், Toronto, Canada, பெரியகுளம்

30 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, தமிழீழம், வைரவபுளியங்குளம், தமிழீழம்

22 Dec, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், Saint-Denis, France

28 Dec, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, Toronto, Canada

26 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு 14

29 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

29 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, இணுவில் தெற்கு

31 Dec, 2022
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada, Ottawa, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், கொழும்பு, பக்ரைன், Bahrain, Maryland, United States

25 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வேலணை 5ம் வட்டாரம், Markham, Canada

25 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

28 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Mississauga, Canada

31 Dec, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

26 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, வல்வெட்டித்துறை ஊரிக்காடு

27 Dec, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Neasden, United Kingdom

27 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கலவெட்டித்திடல், பிரமந்தனாறு

29 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Scarborough, Canada

25 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada

08 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், திருச்சிராப்பள்ளி, India

27 Dec, 2020
மரண அறிவித்தல்

கோண்டாவில், Scarborough, Canada

23 Dec, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
மரண அறிவித்தல்

வாதரவத்தை, விசுவமடு, Toronto, Canada

22 Dec, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், Zürich, Switzerland

21 Dec, 2025
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, சிட்னி, Australia

21 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர், கைதடி

25 Dec, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

21 Dec, 2025
மரண அறிவித்தல்

எழுவைதீவு, நாரந்தனை, Vejle, Denmark, Horsens, Denmark

20 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி