கொழும்பு உட்பட முக்கிய பிரதேச காணிகள் வெளிநாட்டு முதலீட்டாளர் வசம்? அரசின் திட்டம் அம்பலம்
கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள 50க்கும் மேற்பட்ட இடங்களிலுள்ள முக்கிய காணிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு குத்தகைக்கு வழங்குவதன் மூலம் குறைந்தது 6 பில்லியன் டொலர்களை திரட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இந்த காணிகளில் 51 வீதமான காணிகள் அரச-தனியார் கூட்டு அல்லது கூட்டு முயற்சியின் ஊடாக வழங்கப்படும் என நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சிறினிமல் (Sirinimal Perera)பெரேரா தெரிவித்துள்ளார்.
வாக்ஸ்ஹோல் தெருவில் தலா ஆறு ஏக்கர் மற்றும் டி.ஆர். விஜேவர்தன மாவத்தை, கொழும்பு; நுகேகொட மற்றும் கொள்ளுப்பிட்டி சந்தைகள்; நான்கு ஏக்கர் கொண்ட பெட்டா உலக சந்தை; இராஜகிரிய, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்ல தலா மூன்று ஏக்கர்; மேலும் நுவரெலியா மற்றும் கண்டியில் உள்ள காணிகளும், எக்கல பிரதேசத்தில் ஐம்பத்தைந்து ஏக்கர் காணிகளும் இந்தக் குத்தகைக்கு சொந்தமான காணிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இருப்பினும், ஓமன் சுல்தானட்டில் உள்ள M/S Shumookh Investment and Services (SIS) என்ற நிறுவனம், ஒன்பது ஏக்கர் பெட்டா சாமாஸ் கிரேனரி மற்றும் விமானப்படை தலைமையகத்தை கையகப்படுத்த விருப்பம் தெரிவித்தது.
ஆனால் இது இன்னும் செயல்படுத்தப்படவில்லை.
துபாய் முதலீட்டாளரால் அங்கீகரிக்கப்பட்ட கொழும்பு 5 இல் உள்ள இரண்டு சம்மிட் ஃப்ளாட்ஸ் சொத்துகளும் இந்தப் பட்டியலில் அடங்கும்.