மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்த துயரம்
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
கலஹா, நவனெலிய, கிரிபோகஹைன்ன பகுதியில் மின்சாரம் தாக்கி தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இன்று (07) காலை 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்கள் 46 வயதுடைய தாயும் 13 வயதுடைய மகளும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கறிவேப்பிலை பறித்துக்கொண்டிருந்தபோது துயரம்
கறிவேப்பிலை மரத்தில் கறிவேப்பிலை பறித்துக்கொண்டிருந்த போது, தரையில் விழுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதால் மின்சாரம் தாக்கி இந்த மரணங்கள் சம்பவித்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் கலஹா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 1 மணி நேரம் முன்
குருதியில் நனைந்த தம்பலகாமம்…!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்