தீயில் பலியான 7 வயது பிள்ளை: சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறை!
பலாங்கொடை, தெஹிகஸ்தலாவையில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 வயது பிள்ளையொன்று உயிரிழந்துள்ளது.
குறித்த தீ விபத்தானது, இன்று (9) அதிகாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறை அவசர தொலைபேசி எண்ணில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பலாங்கொடை காவல்துறையினர் உயிரிந்த பிள்ளையின் உடலை மீட்டுள்ளனர்.
உயிரிழப்பில் சந்தேகம்
எனினும், தாயும் தந்தையும் காயங்களில் இன்றி தப்பியுள்ள நிலையில், குறித்த உயிரிழப்பு தொடர்பில் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பிள்ளையான் தந்தை போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், குடும்ப தகராறு காரணமாக தாயும் தந்தையும் பிரிந்து வாழ்ந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தாய் வேறொருவருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பான நீதவான் விசாரணையை பலாங்கொடை பதில் நீதவான் விசாரணை நடத்தவுள்ளதாகவும், பிள்ளையின் சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா
