தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்க்கப்பட்ட தாயும் குழந்தைகளும்

Sri Lanka Police Mullaitivu Sri Lanka Police Investigation
By Sumithiran Jul 24, 2025 11:02 AM GMT
Sumithiran

Sumithiran

in சமூகம்
Report

முல்லைத்தீவு(mullaitivu) மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில் குறித்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றிலிருந்து சடலமாக இன்று(24) மீட்கப்பட்டுள்ளனர்

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

கிணற்றின் அருகில் காணப்பட்ட பொருட்கள்

இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினர் கிணற்றில் உடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.

தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்க்கப்பட்ட தாயும் குழந்தைகளும் | Mother And Two Children Dead In Well In Mullaitivu

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் உடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது

கிணற்றுக்குள் கிடந்த சடலங்கள்

மீட்கப்பட்ட உடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்க்கப்பட்ட தாயும் குழந்தைகளும் | Mother And Two Children Dead In Well In Mullaitivu

 உடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி( வயது38) தாய் மற்றும் உசாகரன் மிக்சா ( வயது11) மகள் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்

உயிரிழப்புக்கான காரணம் என்ன..!

இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்க்கப்பட்ட தாயும் குழந்தைகளும் | Mother And Two Children Dead In Well In Mullaitivu

 தாயும் இரண்டு பிள்ளைகளும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் துணயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரம்புட்டானால் பலியாகும் உயிர்கள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ரம்புட்டானால் பலியாகும் உயிர்கள் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

15 வருடங்களின் பின் வெளிவந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் Iron Safe Box

15 வருடங்களின் பின் வெளிவந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் Iron Safe Box

you may like this


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

 

GalleryGallery
ReeCha
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025