வெற்றுக் காணியில் மோட்டார் குண்டு மீட்பு
trinco
bomb
recovery
By Vanan
திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் காவல்நிலைய பிரிவுக்கு உட்பட்ட கல்மெடியாவ வடக்குப் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வெற்றுக் காணியில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டொன்று இன்று (06) மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
தம்பலகாமம் விசேட காவல்துறைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இம் மோட்டார் குண்டு மீட்கப்பட்டுள்ளது.
கந்தளாய் நீதிமன்ற நீதவானின் அனுமதியின் பின், குறித்த மோட்டார் குண்டை செயழிப்பது தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் தற்போது மோட்டார் குண்டு காவல்துறை பாதுகாப்புடன் இருப்பதுடன், மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி