அச்சத்தில் வாயடைத்து நிற்கும் அர்ச்சுனா: அரசாங்கத்தின் திட்டம் அம்பலம்
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களை பற்றி கூற எனக்கு பயமாக இருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (30.06.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "என்னை நீக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது, நான் அதை நீதிமன்றத்தில் கொண்டு செல்வேன்.
எனக்கு பயமாக இருக்கிறது அந்த கொள்கலன்கள் 323க்குள் என்ன இருந்தது என்பதற்கான பட்டியலை நான் உங்களுக்கு வழங்க முடியும்.
அது எங்கிருந்து வந்தது, எந்த நாட்டிலிருந்து வந்தது? என்பதை வழங்க முடியும். ஆனால் அதை வழங்கிய பின்னர் போதைப்பொருள் வழக்கில் பொய்யாக என்மீது வழக்கு பதிவு செய்து எனது எம்.பி பதவியை பறிக்கப் போவதில்லை என்று நிரூபிக்கச் சொல்லுங்கள்.
இல்லையெனில், நான் வேறு நாட்டிற்கு சென்று அதை வெளியிடுவேன். அந்த 320க்குள் என்ன இருந்தது என்பதை நான் பயமின்றி கூறுவேன்.
முழு விவரங்களையும் என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும், ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது ஆனால் நான் கொல்லப்படுவேன் என்று பயப்படவில்லை. அவர்கள் என்னை மீண்டும் மீண்டும் தேவையற்ற வழக்குகளில் இழுக்கிறார்கள்.
என்னை எம்.பி. பதவியிலிருந்து அகற்றுவதன் மூலம் உண்மை வெளிவருவதைத் தடுக்க முயற்சிக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்த விடயங்களை கீழ் உள்ள காணொளியில் காண்க....

செம்மணியில் இருந்து ஐ.நா ஆணையாளரை திருப்பி அனுப்ப திட்டமிட்ட அரசு: முகத்திரையை கிழித்த அர்ச்சுனா எம்.பி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
