பாரிய விபத்தில் சிக்கிய முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல...!
நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல பயணித்த ஜீப் வண்டி விபத்திற்குள்ளாகியுள்ளது.
சப்புகஸ்கந்த, தெனிமல்ல பகுதியில் இன்று (11) இரவு 7.45 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கார் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
விபத்திற்குள்ளான ஜீப்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், விபத்திற்குள்ளான காரில் ஒரு பெண்ணும் மற்றும் சிறு குழந்தையும் இருந்துள்ளதுடன் அவர்கள் இருவரும் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து, பெண் கிரிபத்கொடை வைத்தியசாலையிலும் மற்றும் சிறு குழந்தை சிகிச்சைக்காக ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தோடு, விபத்தில் காயமடைந்த ஜீப் வண்டியில் பயணித்த அசோக ரன்வலவும் சிகிச்சைக்காக கிரிபத்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது விபத்துக்குள்ளான ஜீப் வண்டி, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் காவல்துறை பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் சப்புகஸ்கந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |