மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சாமர சம்பத்
புதிய இணைப்பு
பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 21 ஆம் திகதி வரை அவரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார் சாமர சம்பத் எம்.பி !
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்படி, இன்று (07) காலை பதுளை (Badulla) நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதான அவர் அன்றைய தினம் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி (Tanuja Lakmali) முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இரண்டு குற்றச்சாட்டு
இதன்போது இரண்டு குற்றச்சாட்டுக்களுக்காக அவருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், மற்றுமொரு குற்றச்சாட்டுக்காக அவரை இன்று (01) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
இதையடுத்து, அவரை தொடர்ந்து எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த முதலாம் திகதி உத்தரவிட்டது.
குறித்த உத்தரவை கொழும்பு நீதவான் தனுஜா லக்மாலி பிறப்பித்திருந்தார்.
இந்தநிலையில், இன்று (07) அவர் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
