நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்)

Sri Lanka Army Sri Lanka Police Wickremesinghe Ranil Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples
By Vanan May 15, 2022 09:09 PM GMT
Report

ஈழத்தமிழ் மக்களின் வலிசுமந்த முள்ளிவாய்க்கால் தினம் நெருங்கும் நிலையில், அதற்கான தடைகளை சிறிலங்கா காவல்துறை, இராணுவம் ஏற்படுத்தி வரும் நிலையில், நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க அனுமதிக்க மாட்டோம் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களது ஆன்மாவை வைத்து வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்துவதற்கு உறவுகளுக்கு உரிமையுண்டு என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களின் ஆட்சிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களுக்கு காவல்துறையினரால் நீதிமன்றத் தடைகள் பெறப்பட்டு தடுக்க முற்படுகின்ற போதிலும், பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் நினைவேந்தல்கள் தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்றன.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்) | Mullivaikal Remembrance Day Ranil Statement

இந்த நிலையில், இம்முறையும் நினைவேந்தல்களுக்கு தடை ஏற்படுமா? என ஊடகவிலாளர்கள் வினவியபோது, ரணில் விக்ரமசிங்க இந்தப் பதிலை வழங்கியதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நல்லாட்சியில் சகல நினைவேந்தல்களையும் நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்ரமசிங்க, அதேபோன்று இனியும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்) | Mullivaikal Remembrance Day Ranil Statement

தெற்கிற்கு ஒரு நீதி, வடக்கிற்கு ஒரு நீதி என இருக்கக்கூடாது என வலியுறுத்திய அவர், போரில் இறந்தவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எதிர்வரும் 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் நேற்றையதினம்(14) பதிவாகியிருந்தது.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்) | Mullivaikal Remembrance Day Ranil Statement

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகில் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அருகில் காவல்துறையினரும் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரும்பும் சந்தியில் இராணுவத்தினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்யப்படலாம் என்ற நிலையில், மக்களை அச்சமடையச் செய்யும் நோக்குடன் அங்கு செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக காவல்துறையினர், இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்கள் தங்களுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்) | Mullivaikal Remembrance Day Ranil Statement

இதன் ஒரு அங்கமாக, குறித்த பகுதிக்குச் சென்றுவந்த ஊடகவியலாளரை மறித்த காவல்துறையினர் ஆவணங்களை கோரி, ஆவணங்களை தங்களுடைய புத்தகங்களில் பதிவு செய்துள்ளனர்.

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ள போதிலும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அண்மித்த பகுதிகளில் “இன்று (15) இச்செய்தி பதிவேற்றும் வரை” காவல்துறையினரும், இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்) | Mullivaikal Remembrance Day Ranil Statement

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025