நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்)

Sri Lanka Army Sri Lanka Police Wickremesinghe Ranil Mullivaikal Remembrance Day Sri Lankan Peoples
By Vanan May 15, 2022 09:09 PM GMT
Report

ஈழத்தமிழ் மக்களின் வலிசுமந்த முள்ளிவாய்க்கால் தினம் நெருங்கும் நிலையில், அதற்கான தடைகளை சிறிலங்கா காவல்துறை, இராணுவம் ஏற்படுத்தி வரும் நிலையில், நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க அனுமதிக்க மாட்டோம் என புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வுகளில் இறந்தவர்களது ஆன்மாவை வைத்து வைத்து எவரும் அரசியல் செய்யக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

போரில் இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை நினைவேந்துவதற்கு உறவுகளுக்கு உரிமையுண்டு என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களின் ஆட்சிகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்களுக்கு காவல்துறையினரால் நீதிமன்றத் தடைகள் பெறப்பட்டு தடுக்க முற்படுகின்ற போதிலும், பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் நினைவேந்தல்கள் தமிழர் தாயகத்தில் இடம்பெறுகின்றன.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்) | Mullivaikal Remembrance Day Ranil Statement

இந்த நிலையில், இம்முறையும் நினைவேந்தல்களுக்கு தடை ஏற்படுமா? என ஊடகவிலாளர்கள் வினவியபோது, ரணில் விக்ரமசிங்க இந்தப் பதிலை வழங்கியதாக தமிழ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த நல்லாட்சியில் சகல நினைவேந்தல்களையும் நடத்துவதற்கு அனுமதி வழங்கியிருந்ததாக சுட்டிக்காட்டியுள்ள ரணில் விக்ரமசிங்க, அதேபோன்று இனியும் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்) | Mullivaikal Remembrance Day Ranil Statement

தெற்கிற்கு ஒரு நீதி, வடக்கிற்கு ஒரு நீதி என இருக்கக்கூடாது என வலியுறுத்திய அவர், போரில் இறந்தவர்கள் அனைவரும் இலங்கையர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், எதிர்வரும் 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் நிலைமைகள் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு காவல்துறையினர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் நேற்றையதினம்(14) பதிவாகியிருந்தது.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்) | Mullivaikal Remembrance Day Ranil Statement

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வளாகத்திற்கு அருகில் இராணுவ காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு அருகில் காவல்துறையினரும் காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரும்பும் சந்தியில் இராணுவத்தினர், காவல்துறையினர் குவிக்கப்பட்டு சோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் செய்யப்படலாம் என்ற நிலையில், மக்களை அச்சமடையச் செய்யும் நோக்குடன் அங்கு செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக காவல்துறையினர், இராணுவத்தினர், இராணுவப் புலனாய்வாளர்கள் தங்களுடைய நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்) | Mullivaikal Remembrance Day Ranil Statement

இதன் ஒரு அங்கமாக, குறித்த பகுதிக்குச் சென்றுவந்த ஊடகவியலாளரை மறித்த காவல்துறையினர் ஆவணங்களை கோரி, ஆவணங்களை தங்களுடைய புத்தகங்களில் பதிவு செய்துள்ளனர்.

புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்க அனுமதிக்க மாட்டோம் என கூறியுள்ள போதிலும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை அண்மித்த பகுதிகளில் “இன்று (15) இச்செய்தி பதிவேற்றும் வரை” காவல்துறையினரும், இராணுவத்தினரும், புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு செல்பவர்களை அச்சுறுத்தும் விதமாக செயற்படுவதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடையில்லை என்கிறார் ரணில் - ஆனால் நடப்பது என்ன...!! (படங்கள்) | Mullivaikal Remembrance Day Ranil Statement

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024