யாழில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்
உள்நாட்டு யுத்தத்தால் தமது உயிர்களை நீத்தவர்களை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின், 17 ஆவது ஆண்டு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றது
யாழில் குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு நேற்றையதினம் யாழ்ப்பாணம் - நாவாந்துறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நினைவேந்தல்
17 ம் ஆண்டு நினைவிற்கான இன அழிப்பு வாரத்தின், 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பட்டிணியாலும் பசியாலும் மக்கள் வாடிக்கொண்டிருந்த போது, இருந்த அரிசியை கஞ்சியாக சமைத்து மாண்டவர் போக மீதி மக்களின் உயிரைக் காப்பாற்றிய உப்பிலாக் கஞ்சியினை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முகமாக இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் யாழ். நண்பர்கள் வட்டமும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



முள்ளிவாய்க்கால் 17 வல்லரசுகளின் சதுரங்க வேட்டையில் ஈழத்தமிழினம் விடுதலையை சாத்தியமாக்கும் புதிய பூகோள அரசியல் மூலோபாயம்!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |