முருகன் உள்ளிட்ட 4 பேரை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை
Rajiv Gandhi
Tamil nadu
Sri Lanka
By Vanan
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ் உள்ளிட்ட நான்கு பேரை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திருச்சி அகதிகள் முகாமில் இருக்கும் முருகனை, அங்கிருந்து விடுவித்து தன்னுடன் வாழ அனுமதிக்கும்படி அவரது மனைவி நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பதில் மனு
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியுள்ளதாவது: ராஜிவ் கொலை வழக்கில் விடுதலையான 4 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

4 பேரின் கடவுச்சீட்டு உள்ளிட்ட பயண ஆவணங்களைக் கேட்டு இலங்கை துணைத்தூதரகத்தில் டிசம்பரில் மனு அளிக்கப்பட்டது.
ஆவணங்கள் கிடைத்த உடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்” என அந்த பதில் மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மரண அறிவித்தல்