சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் சிப்பாயின் கொலைவெறி
மூதாட்டி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த பின்னர் அவரது சடலத்தை தீ வைத்து எரித்த சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் சிப்பாய் ஒருவர், ராகம காவல்துறையினரால், இன்று சனிக்கிழமை (08) கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் ராகம, தலகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 39 வயதுடைய முன்னாள் இராணுவ சிப்பாய் என, காவல்துறையினர் தெரிவித்தனர்.
வீடொன்றுக்குள் நுழைந்து மூதாட்டி கொலை
குறித்த முன்னாள் இராணுவ சிப்பாய் கடந்த 05 ஆம் திகதி ராகம, தலகொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த 76 வயதுடைய மூதாட்டி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் மூதாட்டியின் சடலத்தை தீ வைத்து எரித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினர் குறித்த இராணுவ சிப்பாயை கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)