உங்கள் நட்சத்திரங்களுக்கு பொருத்தமான வேலைகள் எவையென்று தெரியுமா..!
எம்மில் பலர் பொருத்தமில்லாத வேலைகளை செய்துக்கொண்டு, வேலையிலும் வாழ்க்கையிலும் திருப்தியற்ற நிலையில் இருக்கின்றோம்.
ஆனால் நமக்கு எந்த வேலை பொருத்தமானது என்பதனை ஆரம்பத்திலேயே கணிக்க முடிந்தால் இந்த பிரச்சினை இருக்காது.
ஒருவரின் ஜாதகத்தில் சூரிய, சந்திரன் இருக்கும் நிலைக்கு ஏற்ப மற்ற கிரகங்களின் இயக்கம் நடைபெறும்.
இதற்கமைய ஒருவரின் வாழ்க்கையில் சாதகமான மற்றும் பாதகமான பலன்கள் ஏற்படுகின்றன.
இந்த தாக்கமானது வாழ்வின் அனைத்து விடயங்களிலும் செல்வாக்கு செலுத்த கூடியவையாக அமையும்.
நட்சத்திரங்கள்

ஜோதிட சாஸ்திரப்படி, 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள் உள்ளன.
அதேபோல் ஒருவருடைய நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு பொருத்தமான துறை எது என்றும் அவர்கள் வாழ்வில் முன்னெற எந்தெந்த துறைகளை தேர்வு செய்யலாம் என்றும் இலகுவாக கணித்து விட முடியும்.
நட்சத்திரங்களே ஒருவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்க உதவுகிறது.
இந்த நட்சத்திரங்களின் அடிப்படையில் 27 நட்சத்திரக்காரர்களில் எந்த நட்சத்திரக்காரர்கள் என்ன வேலை அல்லது தொழில் செய்தால் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும். வாழ்வில் வெற்றி தரும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
பரணி

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகள், காவல்துறை, சுங்க வரி, விவசாயம் சார்ந்த தொழில்கள், சட்டம் ஆகிய துறைகளில் ஆர்வம் உள்ளர்களாகவும், திறமைமிக்கவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் இந்த துறைகளை தேர்வு செய்து தங்களின் வேலை அல்லது தொழிலை அமைத்து கொண்டால் சிறப்பாக இருக்கும்.
கிருத்திகை

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மருத்துவமனை சார்ந்த பணிகள், நகை அல்லது ஆபரணம் தொடர்பான துறை, மதம் சார்ந்த கல்வியை கற்பிக்கும் வேலையில் சிறப்பானர்களாக இருப்பார்கள்.
இவர்கள் நல்ல ஜோதிடர்களாகவும் இருப்பார்கள்.
ரோகிணி

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் போக்குவரத்து தொடர்பான துறைகள், கால்நடை மருத்துவர்கள், விவசாயி, விவசாய துறை சார்ந்த பணிகள், ஒளியியல் வல்லுநர்களாக இருப்பார்கள்.
மிருகசீரிஷம்

மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாசனை திரவியங்கள் தயாரிக்கும் துறை, வன விவசாயம், இசைத்துறை, பேராசிரியர்கள், கட்டுமான வடிவமைப்பு, இன்டீரியர் டிசைனர் ஆகிய துறைகளை தேர்வு செய்து பணியாற்றினால் அது அவர்களுக்கு வெற்றியையும், உயர்வையும் தரும்.
திருவாதிரை

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜோதிட துறையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
கைரேகை தொடர்பான வேலைகள் இவர்களுக்கு முன்னேற்றத்தை தரும்.
மற்றவர்களின் மனதை படிக்க தெரிந்தவர்கள் இவர்கள் என்பதால் இது அவர்களின் வேலைகளுக்கும் கை கொடுக்கும்.
புனர்பூசம்

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த சிற்பிகளாக, மெக்கானிகல், உணவு பொருட்கள் உரிமையாளர்கள், சமையல் துறை சார்ந்தவர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களாக இருப்பார்கள்.
பொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட துறையில் மிகவும் திறமை படைத்தவர்களாக இருப்பார்கள்.
வீட்டு நிர்வாகத்திலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
பூசம்

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசியலில் திறமையானவர்களாக இருப்பார்கள்.
துறவிகள், தலைவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்களை தேடி மக்கள் வரும் நிலையிலேயே இவர்கள் இருப்பார்கள்.
இவர்கள் நல்ல ஆசிரியர்களாகவும் இருப்பார்கள்.
ஆயில்யம்

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் நிதி தொடர்பான துறைகளில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
பங்குச்சந்தை, மருந்து தயாரிப்பு துறைகள், வழக்கறிஞர்கள், விலை உயர்ந்த கற்களை கையாளும் துறைகளில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
அழகு சார்ந்த துறைகளும் இவர்கள் சிறப்பாக இருப்பார்கள்.
மகம்

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த டாக்டர்களாக இருப்பார்கள்.
குறிப்பாக தோல் சிகிச்சை நிபுணர்களாக, கருப்பை நிபுணர்களாக இருப்பார்கள்.
இவர்கள் ஆசிரியர் துறையிலும் சிறப்பானவர்கள் என பெயர் எடுப்பார்கள்.
பூரம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல இசையமைப்பாளர்களாக இருப்பார்கள்.
கலைத்துறை, சிற்பத்துறை, நடனத்துறை, திருமண தரகு, வழக்கறிஞர்கள், சினிமா துறையில் மிகவும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
உத்திரம்

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கட்டுமானத்துறை, காவல்துறை, வழக்கறிஞர், தீயணைப்பு துறை, சிற்ப துறையிலும் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
ஓவியம் வரைவதிலும் இவர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.
அஸ்தம்

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெசவு துறை, நகை தயாரிப்பு, உணவு துறை, ஓட்டல் உரிமையாளர்கள், சிற்பிகளாக இருப்பார்கள்.
இவர்களுக்கு வடிவமைப்பு, புதிதாக ஒன்றை உருவாக்குவதில் அதிகம் ஆர்வம் இருக்கும்.
சித்திரை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எலக்ட்ரீசியன், பேங்க் அக்கவுண்டன்ட், வீட்டு அலங்காரத்துறை, பத்திரிக்கை துறையில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
நல்ல எழுத்து திறமையும், வடிவமைக்கும் திறமையும் இவர்களிடம் இருக்கும்.