யாழ். நல்லூர் பகுதியில் மலையென குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் - பொதுமக்கள் கடும் சிரமம்

Jaffna Nallur Kandaswamy Kovil National People's Power - NPP
By Dhilak Apr 16, 2025 12:43 AM GMT
Report

யாழ். நல்லூர் (Nallur) பிரதேச சபையின் குப்பை சேமிப்பு மையத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் அவை எரியூட்டப்படுகின்றதால் ஏற்படும் புகையால் அப்பகுதி மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி (Rajeewan Jayachandramurthy) தெரிவித்துள்ளார். 

குறித்த விடயத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.  

அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிடுகையில், “காரைக்கால் இந்து மயானத்தின் அருகில் அமைக்கப்பட்டுள்ள நல்லூர் பிரதேச சபையின் குப்பை சேமிப்பு (சேதனப் பசளையாக்கும்) மையத்தில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வானளாவிய அளவில் சேமிக்கப்பட்டு வருகின்றன.

தமிழர் பகுதியில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: மூவர் காயம்

தமிழர் பகுதியில் நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்: மூவர் காயம்

புகை மற்றும் சுகாதாரக்கேடுகள்

இதனால் சுற்றுவட்டார மக்கள் கடும் அதிருப்தியுடனும், சுகாதார அச்சத்துடனும் வாழ்ந்து வருகின்றனர்.

யாழ். நல்லூர் பகுதியில் மலையென குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் - பொதுமக்கள் கடும் சிரமம் | Nallur Pradeshiya Sabha Garbage Storage Center

இக்குப்பைகள் அவ்வப்போது எரியூட்டப்படுவதால், துர்நாற்றம், புகை மற்றும் சுகாதாரக்கேடுகள் ஏற்படுகின்றன.

இது தொடர்பாக பலமுறை பொதுமக்கள் முறையிட்டிருந்தாலும், பிரதேச சபையினர் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

சற்றுமுன் தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு

சற்றுமுன் தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு

உடனடி தீர்வு வேண்டி கோரிக்கை

அண்மையில் யாழ்ப்பாணம் மாவட்ட அரச அதிபரை நேரில் அழைத்து வந்து, இப்பிரச்சினைக்கான நிலைமையை காட்டியிருந்தேன்.

யாழ். நல்லூர் பகுதியில் மலையென குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் - பொதுமக்கள் கடும் சிரமம் | Nallur Pradeshiya Sabha Garbage Storage Center

அவர் வழங்கிய உறுதிமொழிகளுக்குப் பிறகும், இன்றும் மீண்டும் அதே இடத்தில் குப்பைகள் எரியூட்டப்பட்டமை மக்கள் கோபத்தையும் வருத்தத்தையும் அதிகரித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் உடனடி தீர்வு வேண்டி கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். பொது சுகாதாரத்தையும் சுற்றுச்சூழலையும் பாதுகாப்பதற்கான நிரந்தர தீர்வு விரைவில் எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. என ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழர் பகுதியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்கள்

தமிழர் பகுதியில் அரச உத்தியோகத்தரை தாக்கிய காவல்துறை உத்தியோகத்தர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!       


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்