எரிபொருள் விலை அதிகரிப்பு! அரசாங்கத்திற்கு நாமல் கூறும் அறிவுரை
Namal Rajapaksa
Sri Lankan Peoples
NPP Government
By Dilakshan
உலகச் சந்தை விலையை விட 45 டொலர்கள் அதிக விலைக்கு அரசாங்கம் தற்போது டீசலைக் கொள்முதல் செய்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களின் பிரச்சினைகள்
அதன்போது, நட்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைந்த விலையில் எண்ணெயைக் கொள்முதல் செய்வது சாத்தியம் என்று அரசாங்கம் முன்பு கூறியிருந்தது என நாமல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, அத்தகைய நட்பு நாடு ஏதேனும் இருந்தால், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி எண்ணெயைப் பெற முயற்சிக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, தற்போது எதிர்க்கட்சிகளை அரசாங்கம் அவதூறு செய்வதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாது என்றும் நாமல் ராஜபக்ச சாடியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்