நாமலின் புதிய அரசியல் வியூகம்! முக்கிய முடிவுக்காக கூடுகிறது மொட்டுத்தரப்பு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் குழு, கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி நாளை (ஓகஸ்ட் 4) சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நாமல் ராஜபக்ச தலைமையில் இடம்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
மொட்டுக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 25 பேர் கொண்ட குழு இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதாக நாடாளுமன்றக் குழுவின் செய்தித் தொடர்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரந்த சக்தி
மேலும், ஒரு பொதுவான உடன்பாட்டை எட்டுவது குறித்து இணைந்து விவாதிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கமைய ஒரு உடன்பாட்டை எட்டிய பிறகு, கட்சியுடன் இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களையும், பின்னர் பிற அரசியல் கட்சிகள் மற்றும் பிற எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு பரந்த சக்தியைக் கட்டியெழுப்புவதற்கான விவாதங்கள் தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
