நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்க தீட்டப்படும் திட்டம்
நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதியாக்கும் அனைத்து ஏற்பாடு செயல்படுத்தப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனக திஸ்ஸகுட்டியாராச்சி (Janaka Thissakuttiarachchi ) தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தலைமையகத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ஜனக திஸ்ஸகுட்டியாராச்சி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில், “கடந்த காலகட்டத்தில், நாங்கள் அமைதியாக மாவட்டங்களுக்குச் சென்று, கிராமம் கிராமமாக திட்டத்திற்குச் சென்று, நாமல் ராஜபக்சவுடன் (Namal Rajapaksa) இந்த தீவிர அரசியலை மேற்கொண்டு வருகிறோம்.
அடுத்த தலைவர் நாமல்
இந்த நாட்டின் அடுத்த தலைவர் நிச்சயமாக நாமல் ராஜபக்ச தான் என்று நாங்கள் நம்புகிறோம். நாங்களும் அப்போதே அப்படித்தான் சொன்னோம்.
இன்றைய திகதிக்குள், இந்த நாட்டு மக்கள் தற்போதைய ஜனாதிபதியின் செயல்பாடுகளையும், தற்போதைய அரசாங்கத்தின் அனைத்து செயல்பாடுகளையும் புரிந்து கொள்கிறார்கள்.
எனவே, இந்த நாட்டிற்காக உழைத்த தலைவர் மகிந்த ராஜபக்ச ஆவார். இந்த நாட்டில் நிலவிய போரை முடிவுக்கு கொண்டு வந்த தலைவரும் அவரே.
மகிந்த ராஜபக்ச முகாம்
எனவே, மகிந்த ராஜபக்ச முகாமின் அடுத்த தலைவராக இளைஞர் தலைவர் நாமல் ராஜபக்சவை வைத்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த உள்ளூராட்சி தேர்தலில் பின் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்குவதற்கான எங்கள் திட்டம் உருவாகும்.
அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் ஆரம்ப மட்டத்திலிருந்து தயார் செய்து வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்