நாமல் ராஜபக்சவால் பணியமர்த்தப்பட்ட பெண்! விசாரணையில் வெளிவரவுள்ள மோசடிகள்

Namal Rajapaksa Sri Lanka Sri Lanka Police Investigation
By Dharu Jul 29, 2025 09:07 AM GMT
Report

ஜனாதிபதி செயலகத்தில் முன்னாள் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியமர்த்தப்பட்ட நித்யா சேனானி சமரநாயக்க தொடர்பிலான பாரிய நிதி மோசடி அம்பலமாகியுள்ளதாக சில தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் முன்னாள் விமானப் பணிப்பெண்ணான நித்யா சேனானி சமரநாயக்க, 2010 மற்றும் 2015 க்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சுற்றறிக்கையின் விதிகளைப் புறக்கணித்து, அவரது சம்பளத்திற்கு கூடுதலாக 2,394,460 ரூபாய் எரிபொருள் மற்றும் போக்குவரத்து கொடுப்பனவுகளாக சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளதாக மேற்படி செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தப் பணத்தை அவர் எரிபொருள் கொடுப்பனவாக 1,044,460 ரூபாயாகவும், போக்குவரத்து கொடுப்பனவாக 1,350,000 ரூபாயாகவும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தென்னிலங்கையின் முக்கிய உள்ளூராட்சி சபையில் பதவி விலகிய அநுர தரப்பு உறுப்பினர்

தென்னிலங்கையின் முக்கிய உள்ளூராட்சி சபையில் பதவி விலகிய அநுர தரப்பு உறுப்பினர்

மகிந்த ராஜபக்ச தரப்பு

மொட்டு அரசாங்கத்தின் போது, ​​தனது அதிகாரத்தை தனக்குத் தேவையானபடி பயன்படுத்தியதாக மகிந்த ராஜபக்ச தரப்பு மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நாமல் ராஜபக்சவால் பணியமர்த்தப்பட்ட பெண்! விசாரணையில் வெளிவரவுள்ள மோசடிகள் | Namal Rajapaksa S Proxy Nithya Senani S Fraud

இதன் பின்னணியில் நாமல் ராஜபக்ச மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் மோசடிகள் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன.

அதன்படி, 2015 - 2019க்கு இடைப்பட்ட காலத்தில் ஜனாதிபதி செயலாளராக பணியாற்றிய லலித் வீரதுங்க,  ஜூன் 23, 2010 அன்று அவரை ஜனாதிபதியின் தனிப்பட்ட செயலாளர் அலுவலகத்தில் சிறப்பு திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளம் 35,000 ரூபாவாகவும், கூடுதலாக, எரிபொருள் கொடுப்பனவு 22680.00ரூபாவாகவும், , மற்றும் போக்குவரத்து செலவாக மாதம் 30,000.00 ரூபாவாகவும், ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை விசாரிக்க நியமிக்கப்பட்ட வெலியமுன குழு, இந்த விடயம் தொடர்பாக சேனானி சமரநாயக்கவிடம் கேள்வி எழுப்பியது.

ஈஸ்டர் தாக்குதல் விசாராணை! நம்பகத்தன்மைக்கு சவாலாகியுள்ள முக்கிய அமைச்சு பதவி

ஈஸ்டர் தாக்குதல் விசாராணை! நம்பகத்தன்மைக்கு சவாலாகியுள்ள முக்கிய அமைச்சு பதவி

நித்யா சேனானி சமரநாயக்க

ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸின் பணி குழு உறுப்பினரான நித்யா சேனானி சமரநாயக்க, முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி செயலகத்தில் பணிபுரிய விடுவிக்கப்பட்டார்.

நாமல் ராஜபக்சவால் பணியமர்த்தப்பட்ட பெண்! விசாரணையில் வெளிவரவுள்ள மோசடிகள் | Namal Rajapaksa S Proxy Nithya Senani S Fraud

ஆனால் உண்மையில் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக பணியாற்றி வருகிறார் என்பதை வெலியமுன அறிக்கை வெளிப்படுத்துகிறது. அறிக்கையின்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகிய இரண்டும் அவருக்கு மாதத்திற்கு கிட்டத்தட்ட ரூ.158,000 சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு குழு உறுப்பினராக, கொடுப்பனவுகள் உட்பட, விமான நிறுவனத்தால் அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.

அவர் வழங்கிய சேவைகள் குறித்து தெளிவான விளக்கம் எதுவும் இல்லை, தேவையின்றி ரூ.4.2 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டது என்பதையும், நித்யா சமரநாயக்க கூறிய விடயங்களையும், வெலியமுன விசாரணை அறிக்கை பின்வறுமாறு விளக்கியுள்ளது.

நாட்டை விட்டு வெளியேறிய நாமல்! தூசுத்தட்டப்படும் வழக்கு தொடர்பில் மனு தாக்கல்

நாட்டை விட்டு வெளியேறிய நாமல்! தூசுத்தட்டப்படும் வழக்கு தொடர்பில் மனு தாக்கல்

நாமலின் வேண்டுகோள்

தான் எந்த குறிப்பிட்ட திட்டத்தில் இணைந்திருந்தேன் என்பதை அவரால் அடையாளம் காண முடியவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் நாமலின் வேண்டுகோளின் பேரில் அவர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

தீபா லியனகேவைத் தவிர, அலரி மாளிகையிலோ அல்லது ஜனாதிபதி செயலகத்திலோ தனக்குத் தெரிந்த எந்த அதிகாரிகளின் பெயர்களையும் அவரால் நினைவில் கொள்ள முடியவில்லை.

நாமல் ராஜபக்சவால் பணியமர்த்தப்பட்ட பெண்! விசாரணையில் வெளிவரவுள்ள மோசடிகள் | Namal Rajapaksa S Proxy Nithya Senani S Fraud

அவர் பணிபுரிந்த இடத்தை சரியாக விவரிக்க முடியவில்லை. ஏனெனில் அது ஜனாதிபதி செயலகத்தில் இல்லை. மாறாக அலரி மாளிகையில் எங்கோ இருந்துள்ளது. தேவைப்படும்போது, அவர் லண்டனுக்கும் பெரும்பாலும் பிராந்திய இடங்களுக்கும் பணி குழு உறுப்பினராகப் சென்றுள்ளார்.

மேலும் பட்டியலில் இடம் பெறுவதற்கு அவருக்கு ஒரு "அங்கீகாரம்" கிடைத்துள்ளது. பதவி உயர்வு கடிதத்தில், அவர் மாதத்திற்கு குறைந்தபட்சம் 55 மணிநேரம் பயணம் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்துள்ளது.

அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட குழு உறுப்பினருக்கு முறையற்ற முறையில் செலுத்தப்பட்ட பணத்தை மீட்டெடுக்கவும், பொது நிதியை தவறாகப் பயன்படுத்த அனுமதித்தவர்கள் மீது நேரடியாக வழக்குத் தொடரவும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜே.சி. வெலியமுனா தலைமையிலான விசாரணைக் குழு பரிந்துரைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்