மகிந்தவுக்கு பின்னர் ஜொலிக்காத மொட்டு தரப்பின் அரசியல்! அம்பலப்படுத்தும் நாமல்
கட்சியின் தோல்விக்கு கடந்த ஆட்சி காலத்தில் இருந்த எமது தலைவர்கள் சில அரசியல் தீர்மானங்களை எடுக்க தவறிவிட்டனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வாக்களார் அட்டையில் மொட்டு கட்சியின் சின்னம் கூட இருக்கக் கூடாது என்று சிலர் நினைத்தனர்.
சாதகமற்ற தளம்
எமது சிரேஷ்ட தலைவர்கள் அனைவரும் பின்வாங்கினர், நான் நினைத்துக்கு கூட பார்க்கவில்லை கட்சியை பாரமெடுப்பேன் என்று.
மைத்தானத்தில் தளம் துடுப்பாட்டக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும் போது யாரும் துடுப்பெடுத்து ஆடலாம்.
இருப்பினும், சாதகமற்ற தளத்தில் இறங்குவதையே நான் விரும்புகிறேன், அதை நான் செய்தேன்.
ஜனாதிபதி தேர்தல்
ஜனாதிபதி தேர்தலில் மூன்று வீதம் இருந்த வாக்காளர் நிலையை உள்ளுராட்சி தேர்தலில் பத்து வீதம் வரை அதிகரிக்க கிடைத்தது சாதனையாகும்.
எனது அப்பா ஜனாதிபதியாக இருந்தது எனக்கு அரசியலில் நுழைவதற்கு இலகுவானதாக இருந்தது.
இருப்பினும் அரசியலில் நிலைப்பது கடினமானது, எமது அண்டை வலயத்தில் அவ்வாறான உதாரணங்கள் இருக்கின்றது.
தந்தையின் பார்வை
தந்தைக்கு பின்னர் மகன் ஜொலிக்கவில்லை, ராஜிவ் காந்தியின் மகன் ராகுல் இன்று முயற்சிக்கின்றார்.
அதனால் எனக்கே உரித்தான வழியில் செல்ல தீர்மானித்தேன் ஏனென்றால் தந்தையின் பார்வையிலேயே மகனை மக்கள் நோக்குவர்.
இருப்பினும், தந்தைக்கு இல்லாத நற்குணங்கள் மேலும் தந்தையிடம் இல்லாத கெட்ட குணங்கள் எனக்கு இருக்கலாம் அது மனிதனின் இயல்பாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 25ம் நாள் - கொடியிறக்கம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
