நாமலிடமிருந்து சஜித்திற்கு பறந்த அவசர கடிதம்
SJB
SLPP
Namal Rajapaksa
Sajith Premadasa
By Jaso
சட்டத்தின் ஆட்சியைப் பலவீனப்படுத்தும் நீதிபதிகளின் பதவிக்காலத்தை நீடிக்கும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கூடிப் பேசி கலந்துரையாட வேண்டும் என்று கோரி, நாடாளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஒரு விசேட கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நடவடிக்கை சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று அக்கடிதம் குறிப்பிடுகிறது.
வன்மையாக எதிர்க்க வேண்டும்
இலங்கை சட்டசபை, ஆசிய சட்டசபை மற்றும் பொதுநலவாய சட்டசபை ஆகியவை இது தொடர்பாக ஏற்கனவே தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து இதை வன்மையாக எதிர்க்க வேண்டும் என்றும் அக்கடிதம் குறிப்பிடுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |