60 அடி கம்பத்தில் இருந்து விழுந்த நபர் : பொன்னர் சங்கர் கூத்தின்போது நடந்த துயரம் (காணொளி)
By Raghav
நுவரெலியா (Nuwara Eliya) - நானு ஓயா (Nanuoya) பகுதியில் இடம்பெற்ற பொன்னர் சங்கர் வரலாற்று நாடகத்தில் கம்ப மரம் ஏறும் போது தவறி விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (27.04.2025) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
நானு ஓயா - கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த 63 வயதுடைய முருகன் சதாசிவம் என்பவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இவர் பொன்னர் சங்கர் வரலாற்று கூத்து நாடகத்தில் பெரிய அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வேடமிட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானு ஓயா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி