கியூ.ஆர் திட்டம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு..!
நாடு முழுவதும் 4 மில்லியன் பேர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக பதிவு செய்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய நிலவரம்
4 Million users has registered with the National Fuel Pass as at 9pm yesterday. 299 CEYPETCO Fuel Stations & 34 @LankaIOCPLC Stations has fully adopted or tested the QR system yesterday to complete 92,845 Transactions.#NationalFuelPass #FuelPass pic.twitter.com/fHmjEC4hCA
— Kanchana Wijesekera (@kanchana_wij) July 27, 2022
மேலும், 299 பெட்ரோலியக் கூட்டுத்தாபன மற்றும் 34 ஐஓசி எரிபொருள் நிலையங்களில் நேற்று கியூ.ஆர் முறையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, நேற்றைய தினம் மொத்தமாக 92,845 வாகனங்களுக்கு கியூ.ஆர் முறையில் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.