குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு! கணவரின் கண்முன்னே நடந்த துயரம்
srilanka
police
death
navatkuli
By Vasanth
குடும்ப தகராறினை அடுத்து கணவன் முன்னே மனைவி தீ மூட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது என பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
யாழ்ப்பாணம்- நாவற்குழி புதிய வீட்டு திட்டம் பகுதியை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான நீ.நிரோஜினி (வயது - 30) என்பவரே இவ்வாறு உரிழந்துள்ளார்.
கணவனுடன் ஏற்பட்ட முரண்பாட்டினை தொடர்ந்து கணவன் கண் முன்னே தனக்கு தானே தீ மூட்டியுள்ளார். அதனை கண்டு பதறிய கணவன் தீயை அணைத்து மனைவியை யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
எனினும் அவர், சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
4ம் ஆண்டு நினைவஞ்சலி