யாழில் உழவு இயந்திரத்துடன் ஒன்பது பேர் கடற்படையால் கைது!
யாழில் உழவு இயந்திரத்துடன் ஒன்பது பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில் சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்த ஒன்பது கடற்றொழிலாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வந்துள்ளன.
மேலதிக விசாரணை
இதன் அடிப்படையில் வெற்றிலைக்கேணி கடற்படை மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், வெற்றிலைக்கேணி பகுதியில் சட்ட விரோதமான முறையில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்த ஒன்பது கடற்றொழிலாளர்கள் இரண்டு உழவு இயந்திரங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்துச் சுன்னாகம் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினர், அந்தத் தாக்குதலை முறியடித்துக் குறித்த சந்தேகநபர்கள் மூவரையும் மூன்று வாள்களுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள், உழவு இயந்திரம் மற்றும் ஏனைய மீன்பிடி உபகரணங்களுடன் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக யாழ் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


