நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு ஏற்பட்ட பெருந்தொகை மதிப்பிலான சேதம்!
ஜூலை 5ஆம் திகதி நீர்கொழும்பு சிறையில் இரு கைதிக் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால், சிறைச்சொத்துக்களுக்குப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளன.
இந்த கலவரத்தினால் ரூ. 10 கோடிக்கும் அதிகமான சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவத்தில் 32 பேர் உயிரிழந்ததுடன் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சிறைச்சாலை கலவரத்தின் சேதம்
நீர்கொழும்பு சிறையில் முன்னர் சுமார் 2,400 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு 600 கைதிகள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்கொழும்பு சிறையில் உள்ள சில கைதிகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் இணையவழியில் நடத்தப்படுவதாகவும், மற்றவர்கள் நேரடியாக நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், குருவிட்ட, பல்லஞ்சேன மற்றும் நியூ மகசின் சிறைகளில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் ஈடுபட்ட கைதிகள் குறித்து சிறைத்துறை அதிகாரிகளால் தொடங்கப்பட்ட விசாரணை அறிக்கை இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக காவல்துறை பேச்சாளர் ஏ.எஸ்.பி. எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
6ஆம் திகதி இரவு நியூ மாகசின் சிறையிலும், 7ஆம் தேதி குருவிட்ட சிறை மற்றும் பல்லன்சேன சீர்திருத்த மற்றும் புனர்வாழ்வு மையத்திலும் நடந்த கலவரங்களில் மூன்று கைதிகள் உயிரிழந்ததுடன் 77 கைதிகள் காயமடைந்தனர்.
இந்த நிலையில் குருவிட்ட சிறையில் நடந்த கலவரத்தின்போது உயிரிழந்த இரண்டு கைதிகளுக்கான பிரேதப் பரிசோதனைகள் இன்று நடத்தப்பட உள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |