இது நடந்தால் பேச்சு உடனடியாக முறியும் : ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் கடல்வழிப் போக்குவரத்தில் ஈடுபடும் கப்பல்களிடம் இருந்து தெஹ்ரான் கட்டணம் வசூலிக்க முயன்றால், ஈரானுடனான தூதரகப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(24)தெரிவித்தார்.
அந்த மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த நீர்வழிப்பாதையைக் கடந்து செல்லும் கப்பல்களிடமிருந்து "எந்தவிதமான சுங்கக் கட்டணங்களோ, காப்பீட்டுச் செலவுகளோ, அல்லது வேறு எந்த விதமான கட்டணங்களோ" கோரப்படவோ அல்லது பெறப்படவோ இல்லை என்று ஈரானிய அதிகாரிகள் வோஷிங்டனுக்கு உறுதியளித்ததாக அவர் கூறினார்.
பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடிவுக்கு வரும்
"இது தவறான தகவல் என்றால், பேச்சுவார்த்தைகள் உடனடியாக முடிவுக்கு வரும்," என்று ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தெஹ்ரானுக்கு நேரடியாக எந்தப் பணமும் வழங்கப்படாது என்பதையும் அமெரிக்க ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தினார்.
ஈரானின் நிதி அமெரிக்க விவசாயிகளுக்கு
மாறாக, மக்காச்சோளம் மற்றும் கோதுமை போன்ற ஏற்றுமதிகளுக்காக அமெரிக்க விவசாயிகளுக்குப் பணம் செலுத்த, ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள நிதியைப் பயன்படுத்த வோஷிங்டன் திட்டமிட்டுள்ளது.

"ஈரானுக்கு உணவு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிறது, அதை நாங்கள் பிரத்தியேகமாக அமெரிக்காவிலிருந்து அவர்களுக்காக வாங்குவோம்," என்றும் அவர் மேலும் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
செம்மணி: நிலத்தின் கீழிலிருந்து எழும் எலும்புக்கூடுகளின் போராட்டம்… 10 மணி நேரம் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
3 நாட்கள் முன்