வத்திக்கானின் ஒப்புதல் இல்லாது நியமிக்கப்படும் புதிய ஆயர்கள்! பாப்பரசர் அதிருப்தி
வத்திக்கானின் ஒப்புதல் இல்லாமல் புதிய ஆயர்களை நியமிக்கும் முடிவைக் கைவிடுமாறு, அதிபழமைவாத கத்தோலிக்கக் குழு ஒன்றை பாப்பரசர் வலியுறுத்தியுள்ளார்.
என்பது கத்தோலிக்க திருச்சபைக்குள் இயங்கும் ஒரு பாரம்பரியவாத குருக்களின் அமைப்பான புனித பத்தாம் பயஸ் சங்கம் (SSPX), தனது குருத்துவப் பாடசாலை நான்கு புதிய ஆயர்களை நியமிக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டு மே மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டு, கத்தோலிக்கத் திருச்சபையில் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளிக்கும் அமெரிக்க பாப்பரசருக்கு இது ஒரு பெரும் சவாலாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
SSPX அமைப்பு
மேலும், இந்த நடவடிக்கை பாரம்பரிய வலதுசாரி கத்தோலிக்கர்களுடனான உறவுகளை மேலும் சீர்குலைக்கக்கூடும் என்ற எச்சரிக்கைகளும் உள்ளன.

கத்தோலிக்கத் திருச்சபையில் மேற்கொள்ளப்பட்ட தாராளவாத சீர்திருத்தங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், SSPX அமைப்பானது 1970-ல் சுவிட்சர்லாந்தின் எக்கோன் கிராமத்தில் நிறுவப்பட்டது.
சுமார் 1,500 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அமைப்பு, 1962 மற்றும் 1965-க்கு இடையில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் வத்திக்கான் பேரவையின் சீர்திருத்தங்களை வன்மையாக நிராகரிக்கிறது.
முன்னர் லத்தீன் மொழியில் மட்டுமே நடத்தப்பட்ட ஆராதனைகளை, பிராந்திய மொழிகளில் நடத்த அனுமதிப்பது போன்ற மாற்றங்களை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.
நவீன திருச்சபைகளில் மதத்துரோகங்களும் தவறுகளும் உள்ளன என்றும், இந்த ஆயர் நியமனங்கள் முற்றிலும் நடைமுறைத் தேவையின் காரணமாகவே செய்யப்படுகின்றன என்றும், திருச்சபைக்குள் ஒரு தனி அதிகாரத்தை நிறுவும் நோக்கம் கொண்டவை அல்ல என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும், திருச்சபைச் சட்டத்தின்படி, இத்தகைய நியமனங்கள் கத்தோலிக்கத் திருச்சபையின் ஒற்றுமையைக் குலைக்கும் ஒரு பிளவுபடுத்தும் செயலாகக் கருதப்படுகின்றன.
புதிய ஆயர்கள்
மேலும், இதில் சம்பந்தப்பட்ட புதிய ஆயர்களும், இந்த நியமனங்களைச் செய்த ஆயரும் தானாகவே திருச்சபையிலிருந்து விலக்கப்படுவார்கள்.
இந்தச் செயல் விசுவாசிகளின் ஆன்மீக நலனுக்கு ஏற்படுத்தும் தீங்கைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு SSPX அமைப்பின் தலைவர் அருட்தந்தை டேவிட் பக்லியாரானிக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ கடிதம் அனுப்பியுள்ளார்.
கிறிஸ்துவின் திருச்சபையின் ஒற்றுமையைக் குலைப்பது ஒரு பெரும் பாவம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தக் குழு தொடர்ந்து இதே பிளவுபடுத்தும் விதத்தில் செயல்பட்டால், வருத்தத்துடனேயே அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று திருத்தந்தை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
இதன்படி பாப்பரசரின்கோரிக்கையை நிராகரித்து, SSPX-இன் ஊடக மேலாளரான மார்க்-ஆண்ட்ரே மபிலார்ட், தனது திட்டங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
2 நாட்கள் முன்