ரணிலின் மனைவியிடம் வாக்குமூலம் பெறுவதற்கான புதிய திகதி : வெளியான அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) மனைவி மைத்ரி விக்ரமசிங்கவிடம் (Maithree Wickremesinghe) வாக்குமூலம் பெறுவதற்கான புதிய திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை காவல்துறை ஊடகப் பேச்சாளர் எப்.யு. வுட்லர் (F.U. Wootler) தெரிவித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் ஒன்றின் போது, பொது நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து நிதிக்குற்றப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழா
லண்டனில் உள்ள வொல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் அளிப்பதற்காக மைத்ரி விக்ரமசிங்க கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி நிதிக்குற்றப்பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
எனினும், தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அன்றைய தினம் விசாரணைக்கு முன்னிலையாக முடியாது என அவர் அறிவித்திருந்தார்.
காவல்துறை தரப்பு உறுதி
மருத்துவர்களின் அறிவுரைப்படி தான் வீட்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தேவையெனில் அதிகாரிகள் தனது இல்லத்திற்கே வருகை தந்து வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அவர் கடிதம் மூலம் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில், அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கான அடுத்தகட்ட நடவடிக்கை அல்லது புதிய திகதி குறித்து இதுவரை எந்தத் தகவலும் பரிமாறப்படவில்லை என காவல்துறை தரப்பு உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |