வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி!

Jaffna Sri Lankan political crisis Sonnalum Kuttram
By Theepan Jun 23, 2026 11:29 AM GMT
Report

யாழ்ப்பாணம் , வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிக்குள் காணப்படும் இராணுவத்தின் விவசாய பண்ணைக்கு புதிய பெயர் பலகை நாட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

வலி. வடக்கில் இருந்து சுமார் 36 வருடங்களுக்கு மேலாக தனியார் காணிகளில் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள நிலையில், தமது காணிகளை விடுவிக்குமாறு மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில், குரும்பசிட்டி பகுதியில் உள்ள தனியார் காணிகளில் இராணுவத்தினர் நீண்ட காலமாக விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த பகுதியை இராணுவத்தினரின் விவசாய பண்ணை பகுதியாக அறிவித்து பெயர் பலகை நாட்டும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளமை , அப்பகுதி மக்கள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கோலை கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சியினர்! நாடாளுமன்றில் அமைதியின்மை

செங்கோலை கைப்பற்ற முயன்ற எதிர்க்கட்சியினர்! நாடாளுமன்றில் அமைதியின்மை

மக்களின் காணி மக்களுக்கே

" மக்களின் காணி மக்களுக்கே ... " என அரசாங்கம் கூறிவரும் நிலையில் , வலி.வடக்கில் காணி விடுவிப்பு தொடர்பில் ஆராய்வதற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தந்து ஆராய்ந்து சென்றுள்ளார்.

வலி. வடக்கில் இராணுவத்தின் புதிய அடையாளம்! காற்றில் பறக்கும் மக்களின் காணி மக்களுக்கே வாக்குறுதி! | New Identity Of The Army In The North Valikamam

இந்நிலையில் நிலையில் நாளை மறுதினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்ட கலந்துரையிடலில் காணி விடுவிப்பு தொடர்பில் முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டு , காணி உரிமையாளர்களுக்கு சாதகமான பதில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதோடு இராணுவத்தினர் தமது விவசாய பண்ணைக்கு பெயர் பலகை நாட்டும் செயலில் ஈடுபட்டுள்ளனர்.

அதேவேளை , வசாவிளான் இராணுவ வைத்தியசாலை கட்டுமானம் மற்றும் பருத்தித்துறை - கீரிமலை வீதியில் புதிதாக கட்டப்படும் இராணுவத்தினரின் சிற்றுண்டி சாலை கட்டுமானம் ஆகியவற்றை உடனடியாக நிறுத்துமாறு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் யாழ்.மாவட்ட இராணுவ தளபதிக்கு எழுத்து மூல அறிவித்தல் அனுப்பியுள்ள நிலையிலும் குறித்த கட்டுமான பணிகள் தடையின்றி முழு உத்வேகத்துடன் நடைபெறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் அனுர அரசு : நாமல் குற்றச்சாட்டு

சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகரும் அனுர அரசு : நாமல் குற்றச்சாட்டு

யாழ். விமான நிலைய நடராஜர் சிலை விவகாரம் : கடற்றொழில் அமைச்சருக்கு பறந்த கடிதம்

யாழ். விமான நிலைய நடராஜர் சிலை விவகாரம் : கடற்றொழில் அமைச்சருக்கு பறந்த கடிதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி