கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் : வெளியான அறிவிப்பு
கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக ஆழ்கடலில் மூழ்கிப் பணிபுரியும் கடற்றொழிலாளர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும் விவசாய காப்பீட்டுச் சபையினால் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீண்டகாலமாக அதனுடன் தொடர்புடைய கடற்றொழிலாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த விசேட திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
கடற்றொழில் சார்ந்த மூழ்கும் நடவடிக்கை
அதன்படி, கடற்றொழில் சார்ந்த மூழ்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் போது மரணம் சம்பவித்தால், காப்பீடு செய்தவருக்கு 12 இலட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும்.

கடல் அல்லது நன்னீர் நிலைகளில் மூழ்கிப் பணியாற்றும் போது ஏற்படும் விபத்துக்களால் தற்காலிகமாகச் செயலிழப்பவர்கள் அல்லது அங்கவீனமடைபவர்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கப்படும்.
ஒரு வருடத்திற்கான இந்த காப்பீட்டுப் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்ள கடற்றொழிலாளர் ஒருவர் வருடாந்தம் 1,920 ரூபாய் மாத்திரமே செலுத்த வேண்டும்.
பாதுகாப்புத் தேவையைப் பொறுத்து 12 இலட்சம் மற்றும் 15 இலட்சம் ரூபாய் வரையான காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |