புதிய தோற்றத்தை பெறப்போகும் ஐக்கிய தேசியக் கட்சி! வெளியான அறிவிப்பு
ஐக்கிய தேசியக் கட்சி (UNP) இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் புதிய முகங்களுடன் புதிய தோற்றம் பெறும் என அதன் துணைப் பொதுச்செயலாளர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறியதாவது, “கட்சியில் இளைஞர் தலைமுறைக்கு அதிக பங்கு வழங்கும் வகையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அடிப்படை மட்டத்தில் செயல்பாடுகளை ஆரம்பிப்போம். டிசம்பர் மாதத்திற்குள் கட்சி புதிய முகங்களுடன் உருவெடுக்கும்,” என்றார்.
ரணிலின் அறிவு
தற்போதைய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் உள்ள அரசியல் அனுபவமும் அறிவும் இளைய தலைமுறைக்கு பரிமாறப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ஹரின் வலியுறுத்தியுள்ளார்.

“தற்போதைய தலைவரிடம் உள்ள அனுபவம் இளம் தலைமுறைக்கு சென்றடையாமல் போகக் கூடும் என்ற அச்சம் எங்களுக்குள்ளது. ஆகவே, இளைஞர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளும் சூழலை உறுதி செய்வோம்,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |