உலகிலேயே அபூர்வமான இரத்த வகை: இந்திய பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம்
இந்தியாவை (India) சேர்ந்த ஒரு பெண்ணுக்கு உலகில் யாருக்குமே இல்லாத புதிய இரத்த வகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடக (Karnataka) மாநிலம் கோலாரை சேர்ந்த 38 வயதான பெண் இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு என்ன இரத்த வகை என்பதை அங்குள்ள மருத்துவர்களால் உறுதி செய்ய முடியவில்லை இந்தநிலையில், அவரது குடும்பத்தில் யாருக்கும் அந்த இரத்த வகை பொருந்தவில்லை.
சிவப்பு அணுக்கள்
பொதுவாக சிவப்பு அணுக்கள் வினைபுரியும் நிலையில் இருக்காது என்ற அடிப்படையில், அவரது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் வினைபுரியும் நிலையில் இருந்துள்ளது.
இதனையடுத்து, அந்த பெண்ணின் இரத்தம் "ORH பொசிட்டிவ்" வகையை சேர்ந்தது என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, பெங்களூரு டி.டி.கே. இரத்த மையத்தில் அமைந்திருக்கும் அதிநவீன இம்முனோஹெமடாலஜி ரெபரென்ஸ் இரத்த பரிசோதனை மையத்துக்கு பெண்ணின் இரத்த மாதிரி அனுப்பி பரிசோதித்த போதும், இரத்த சிவப்பணுக்கள் வினைபுரியும் நிலையிலே இருந்துள்ளது.
விரிவான ஆராய்ச்சி
அங்கு பத்து மாதங்கள் நடைபெற்ற விரிவான ஆராய்ச்சிக்கு பின்னர், இரத்தத்தில் புதிய வகை ஆன்டிஜென் குரோமர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரத்தவகைக்கு “CRIB” என அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ள நிலையில், இதில் CR என்பது குரோமரையும் மற்றும் IB இந்தியா மற்றும் பெங்களூருவையும் குறிக்கின்றது.
கோலாரை சேர்ந்த இந்த பெண்ணுக்கு உள்ள இரத்த வகை உலகில் இவர் ஒருவருக்கு மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
