ஜனாதிபதியின் நீண்டநாள் திட்டம் இது! சிறப்பு அதிகாரம் கொண்ட புதிய செயலாளர் வெளியிட்ட செய்தி
இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள செயற்றிட்டங்களை துரிதப்படுத்தி முடிக்க நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரம் கொண்ட நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளருக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.
இதையடுத்து, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா தலைமையின் கீழ் நிர்மாணத் துறையில் நிர்மாணப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
கொழும்பு கொம்பனிவீதி புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு நிலப்பரப்பில் ஒரு அடுக்குமாடி அலகு தேர்ந்தெடுக்கப்பட்டது, அங்கு 300 வீடுகள் அமைக்கப்பட உள்ளன.
இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், 'இந்த வீடுகளின் நிர்மாணப் பணிகளை முடித்து இந்த வீடுகளுக்கு பணம் செலுத்திய அனைவருக்கும் ஒப்படைக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்' என்று அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா தெரிவித்தார். இது தொடர் குடியிருப்பு வீட்டுத் திட்டமாகும்.
ஜனாதிபதி அப்போதைய பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அவரால் இந்த திட்டம் முடிவு செய்யப்பட்டது.
நிர்மாணப் பணிகளை மீண்டும் தொடங்குவதற்காக ஜனாதிபதி என்னை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக நியமித்ததும், அவை விரைவாக முடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
அவருடைய நம்பிக்கைக்கு ஏற்ப இங்கு பணிகளை முடிக்க நாங்கள் முடிக்கவுள்ளோம்' என அமைச்சின் செயலாளர் தெரிவித்தார் மேலும், பாகிஸ்தான் உயர் ஸ்தானிகரக விற்பனை ஆலோசகர் திருமதி அத்மா தமால் அவர்களால் மாகா நிர்மாணிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவப் பணிப்பாளர் கப்டன் எம்.பீ.குலரத்ன ஆகியோரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் பட்டயக் கட்டடக் கலைஞர் ஹர்ஷன் டி சில்வா, விற்பனை ஆலோசகர் திருமதி அத்மா தமால், மாகா நிர்மாணிப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் கப்டன் எம்.பீ.குலரத்ன, எக்ஸ்போ கிராண்ட் செயற்றிட்டத்தின் நிர்வாக பணிப்பாளர் ஜொனி பெர்னாண்டோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கொம்பனிதெரு உள்ள டெஸ்டினி அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிர்மாணப் பணிகள் மீண்டும் தொடங்கப்படுவதைக் காண அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு, நகர அபிவிருத்தி, கடலோர பாதுகாப்பு கழிவு அகற்றல் மற்றும் பொது சுகாதார இராஜாங்க அமைச்சர் நாலக்க கொடஹேவா வழிகாட்டுதலின் பேரில், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, பணிப்பாளர் நாயகம் பட்டய நகர கட்டடக் கலைஞர் பிரசாத் ரணவீர ஆகியோரின் மேற்பார்வையில் நகர அபிவிருத்தி அதிகாரபையினால் அனைத்து நிர்மாணப் பணிகளும் மேற்பார்வை செய்யப்படுகின்றன.