புத்தாண்டை முன்னிட்டு நல்லூரில் தீபம் ஏற்றி வழிபாடு
நல்லூர் கந்தசுவாமி கோவில்
வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் (Jaffna) - நல்லூர் கந்தசுவாமி கோவில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்த போது தீபங்கள் ஏற்றப்பட்டன.
2026 ஆம் ஆண்டு பிறந்த நேரத்தில் நள்ளிரவு 12 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோயில் தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டு வரவேற்கப்பட்டது.
வவுனியா
வவுனியா - இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புது வருட விசேட ஆராதனை நிகழ்வுகள் இன்று இடம் பெற்றிருந்தன.


நள்ளிரவு 12 மணிக்கு ஆலயத்தின் பங்குத்தந்தை கிறிஸ்தோபர் அந்தோனிதாஸ் டலீமா தலைமையில் இடம்பெற்ற விசேட ஆராதனையில் திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டதோடு விசேட வழிபாடுகளும் இடம் பெற்றிருந்தது.
இதன்போது நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


மட்டக்களப்பு
2026ஆம் ஆண்டுப் பிறப்பினை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று நள்ளிரவு விசேட நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு நகரில் நள்ளிரவு 12.00 மணிக்கு பட்டாசுகள் கொளுத்தப்பட்டு, இளைஞர்கள் ஆடிப்பாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
மாவட்டத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும் பெருமளவான பொதுமக்கள் இன, மத வேறுபாடுகளின்றி மட்டக்களப்பு நகரில் ஒன்று கூடியதை காண முடிந்தது.
கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தில் என்றும் இல்லாதவாறு புதுவருடத்தை வாணவேடிக்கைகள் பட்டாசுகள் கொளுத்தி ஏ9 வீதி வாணவேடிக்கைகள் வண்ணமயமான காட்சிகளினால் தோற்றமளித்தது.
கிளிநொச்சி மாவட்ட மக்கள் மிக சிறப்பாக புதுவருடத்தை வரவேற்கப்பட்டது சிறப்பம்சமாகும்.
மன்னார்
மன்னார் மறை மாவட்டத்தில் புத்தாண்டு நள்ளிரவு திருப்பலி மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டு தூய ஆவியானவரின் ஆண்டாக பிரகடனப் படுத்தப்பட்ட நிலையில் இரவு 11.30 மணியளவில் மன்னார் தூய செபஸ்தியார் பேராலய வளாகத்தில் அமைக்கப்பட்ட பெயர் பலகையை மன்னார் மறைமாவட்ட ஆயர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

அதனை தொடர்ந்து நேற்று (31) இரவு 11.45 மணிக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் குருக்கள் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுத்தனர்.
இதன்போது ஆலயத்திற்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பை வழங்கியிருந்தனர். மேலும் குறித்த புத்தாண்டு நள்ளிரவு திருப்பலியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |