சிறிலங்காவில் அடுத்து ஆட்சிக்கு வரப்போவது 100 நாள் மட்டுமே பதவியில் இருக்கும் அரசதலைவரா?
சில நிபந்தனைகளின் கீழ் அடுத்த அரசதலைவர் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனடிப்படையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் பதவியை ஒழிக்கும் வாக்குறுதியுடன் சகல எதிர்க்கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனை அடிப்படையான நோக்கமாக கொண்டு 100 நாட்களுக்கு மாத்திரமே அரசதலைவராக பதவியில் இருக்கும் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரசதலைவர் பதவியை ஒழிக்கும் வாக்குறுதி மட்டுமல்லாது, அதற்கான வேலைத்திட்டம் மற்றும் வாக்குறுதியை நிறைவேற்றக் கூடியவர் என நம்பக் கூடிய பின்னணியை கொண்டுள்ள நபரை பொது வேட்பாளராக நிறுத்துவதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
முன்னணி சமூக செயற்பாட்டாளர்கள் சிலரது தலைமையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இது சம்பந்தமாக இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்துள்ளன.