80 போர் விமானங்களுடன் ஈரானை நோக்கி புறப்பட்டது அமெரிக்காவின் அடுத்த போர்க்கப்பல்!
அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய மற்றும் திறன் வாய்ந்த விமானம் தாங்கி கப்பல்களில் ஒன்றான USS George H.W. Bush விரைவில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த கப்பல், ஒரே நேரத்தில் 80-க்கும் மேற்பட்ட போர்விமானங்களை ஏற்றிச் செல்லக்கூடிய மிதக்கும் விமான தளம் எனக் கருதப்படுகிறது.
இதன் மூலம் வான்வழி தாக்குதல்கள், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவாக மேற்கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
வெற்றிகரமாக முடிக்கப்பட்ட பயிற்சிகள்
அமெரிக்க மத்திய கட்டளையின் கட்டுப்பாட்டுப் பகுதியில் குறிப்பாக மத்திய கிழக்கில் நடைபெறும் நடவடிக்கைகளில் இந்த கப்பல் இணைக்கப்படலாம் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கப்பலும் அதன் தாக்குதல் குழுவும் சமீபத்தில் கப்பலை நிலைநிறுத்துவதற்கு முன் பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஏவுகணை தகர்ப்புக் கப்பல்கள்
இதற்கிடையில், அமெரிக்க கடற்படையின் ஏவுகணை தகர்ப்புக் கப்பல்களான USS Donald Cook மற்றும் USS Mason ஆகியவை இந்த வாரமே அமெரிக்காவை விட்டு புறப்பட்டு, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் சேர்வதற்காக பயணமாகியுள்ளன.

மேலும், USS Ross என்ற மற்றொரு ஏவுகணை அழிப்பு கப்பலும் அமெரிக்காவிலிருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது எந்த இடத்திற்குச் செல்கிறது என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.
இந்த நடவடிக்கைகள், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் இராணுவ இருப்பை வலுப்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகின்றன. குறிப்பாக ஈரான் தொடர்பான பதற்றம் அதிகரிக்கும் நிலையில், இந்தப் படையணி நகர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |