அநுரவுக்கு ஏற்பட்டாலும் இவ்வாறே ஒன்றிணைவோம்: ஒப்பிட்டு கூறும் விமல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு (Anura Kumara Dissanayake) எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமை ஏற்பட்டாலும் நாங்கள் ஒன்றிணைவோம் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.
எங்களுக்கு யார் என்பது முக்கியமில்லை, அநீதி ஒன்று ஏற்பட்டால் அதற்காக நாம் ஒன்று சேர்வோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பின் ஊடான ஒரு சர்வாதிகாரம் ஒன்று இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது, இது தப்பான எடுத்துக்காட்டாகும்.
நாட்டில் ஊழல்
நாட்டில் ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டும் என்றால் அதற்கா ஒரு இயங்கு தளம் ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
இலங்கையில் 1971 ஆம் ஆண்டு ஏப்ரல் கலவரத்தின் பின்னர் அன்றிருந்த பிரதம மந்திரி குற்றவியலுக்கான நீதி கோரும் ஆணைக்குழு ஒன்றை அமைத்து காரணங்களை கேட்டறிந்து நடவடிக்கை எடுத்தார்.
நிதிமோசடி
குறித்த விடயம் தொடர்பில் நிதிமோசடிக்கான நீதி கோரும் ஆணைக்குழு ஒன்றை ஆரம்பித்து நடவடிக்கை எடுப்பதை விடுத்து. தங்களுக்கு வேண்டாதவர்களை பழிதீர்க்கும் அல்லது தண்டிக்கும் செயற்பாட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களை தண்டிக்க நினைத்தால் அதற்கா ஒரு ஆணைக்குழுவை ஆரம்பித்து நாட்டு அனைவரும் அதில் முறைப்பாடுகளை தெரிவிக்க சந்தர்ப்பம் வழங்கி அதை விசாரணைக்குட்படுத்தியே தீர்வு வழங்குவதே நீதியான செயற்பாடாகும்.
இல்லாமல் தங்கள் நினைத்த மாத்திரத்தில் எதிர்க்கட்சியினரை முடக்க நினைத்தால் அதற்காக யாராக இருந்தாலும் நாம் முன்னிற்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்