இலங்கையில் ரஷ்ய தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் நிலை என்ன? வெளிவந்த தகவல்
corona
people
sputnik v
By Shalini
ரஷ்யாவின் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியின் முதல் கட்டம் கொழும்பு மாவட்டத்தில் கோதடுவ பகுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் இதுவரை ஸ்பூட்னிக்-வி தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து அறிக்கைகள் எதுவும் பதிவாகவில்லை என கோதடுவ பொதுச் சுகாதார ஆய்வாளர் நலின் பொன்சேகா கூறினார்.
30 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு நேற்று சுமார் 670 டோஸ் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
ரஷ்யாவில் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் தொற்றுநோயியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனம் உருவாக்கிய COVID க்கான ஸ்பூட்னிக் வி தடுப்பூசியை இலங்கை நேற்று வெளியிடத் தொடங்கியமை குறிப்பிடத்தக்கது.