ஹரிணிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! எதிர்க்கட்சிகள் அதிரடி
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சி இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டது.
தற்போதைய அரசாங்கத்தின் கல்வி சீர்திருத்தங்களில் உள்ள பாடத்திட்டங்கள் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கம் தொடர்பான ஏராளமான பிழைகள் மற்றும் இந்தப் பிரச்சினைகளை பொறுப்பான முறையில் தீர்க்கத் தவறியதைக் கருத்தில் கொண்டு இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
முதல் கையொப்பம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த கையொப்பமிடும் நிகழ்வு நடைபெற்றது.

அதன்போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முதல் கையொப்பத்தை இட்டார்.
இந்த நிலையில், இந்த வாரம் பிரேரணை சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 6 மணி நேரம் முன்