உக்ரைனுக்கு இனி ஆயுத உதவிகள் வழங்கப் போவதில்லை: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முக்கிய நாடு
உக்ரைன் ரஷ்யப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வரும் நிலையில், இனி உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை முன்னெடுக்க போலந்து தயாராக இல்லை என போலந்து பிரதமர் மாடசஸ் மொரவில்கி (Madeses Moravilki) அறிவித்துள்ளார்.
தானிய இறக்குமதி தொடர்பில் ஏற்பட்ட கருத்து மோதலே இந்த முடிவிற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இனி தங்களுக்கான நவீன ஆயுதங்களை உருவாக்க தனி கவனம் செலுத்த இருப்பதாகவும் போலந்து பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ஐக்கிய நாடுகள் சபை கூட்டப்பட்ட நிலையில், அதில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்த கருத்துக்கள் தங்கள் கொள்கைகளுக்கு ஏற்படுடையதாக இல்லை என தங்கள் நாட்டுக்கான உக்ரைன் தூதரிடம் போலந்து குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா சபையில் ஜெலென்ஸ்கி, ரஷ்யா உக்ரைன் போரில் உக்ரைனை ஆதரிக்க சில நாடுகள், பயப்பட்ட நிலையில் போர் தொடுத்த முதல் நாளில் இருந்தே போலந்து உக்ரைனுக்கு ஆதரவளித்து வருகிறது என்றார்.
இந்நிலையில் தான், உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை முன்னெடுக்க போலந்து தயாராக இல்லை என புதன்கிழமை நாட்டு மக்களுக்கு அளித்த செய்தியில் அறிவித்துள்ளார்.
கப்பல் போக்குவரத்து
கருங்கடல் கப்பல் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ள நிலையில், உக்ரைனின் தானியங்களின் பெரும்பகுதி மத்திய ஐரோப்பாவில் குவிந்துள்ளது.

இதற்கமைய, ஐரோப்பிய ஒன்றியமானது, உள்ளூர் விவசாயிகளைப் பாதுகாக்கும் பொருட்டு பல்கேரியா, ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஸ்லோவாக்கியா ஆகிய ஐந்து நாடுகளுக்கு தானிய இறக்குமதியை தற்காலிகமாக தடை செய்துள்ளது.
உக்ரைன் தானிய வரவால், உள்ளூர் சந்தை கடுமையாக பாதிக்கப்படும் என்ற அச்சமே இதற்கு காரணம் என தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், செப்டம்பர் 15ம் திகதி இந்த தற்காலிகத் தடைக்கு முடிவு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தானிய இறக்குமதி தடை
ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்து நாடுகள் தானிய இறக்குமதி தடையை தொடர்ந்து முன்னெடுக்கவே முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் தான், இந்த நாடுகளுக்கு எதிராக உக்ரைன் வழக்கு தொடுக்க முடிவெடுத்தது. இந்த முடிவுதான் உக்ரைனுக்கு எதிராக போலந்து நாட்டை இவ்வாறு முடிவெடுக்க வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.