பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி கட்டணத்திருத்தம் தொடர்பாக வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்!
பேருந்து மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றின் கட்டணங்களில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் , மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன.
நேற்று இரவு (30) எரிபொருள் விலையில் ஏற்பட்ட திருத்தத்தினைக் கருத்தில் கொண்டு, பேருந்து மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான கட்டணங்களில் எந்தவிதமான திருத்தங்களும் மேற்கொள்ளப்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதற்கான செலவினை
இது குறித்து பேருந்து சங்கங்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
"நேற்று இரவு முதல் டீசலின் விற்பனை விலையிலிருந்து 27 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது, இதற்கு முன்னர் டீசலின் விலை 15 ரூபாயினால் அதிகரிக்கப்பட்ட போது பேருந்து கட்டணத்தினை அதிகரிக்காமல் அதற்கான செலவினை பேருந்து சங்கம் ஏற்றுக்கொண்டு அதிக டீசல் கட்டணத்தின் போதும் சேவை வழங்கப்பட்டது.

தற்போது இந்த விலைக்குறைப்பிலிருந்து மெல்ல மெல்ல இழப்புச் செலவுகளை மீட்டெடுக்க முடியும் என்பதால் பேருந்து கட்டணத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய முடியாது" என பேருந்து சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விலைகளில்
இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணத்தையும் குறைக்க முடியாதுள்ளதாக முச்சக்கர வண்டி சங்கங்கள் தெரிவித்துள்ளன,

எரிபொருள் விலைகளில் திருத்தங்களை அவ்வப்போது மாற்றிக்கொண்டு இருப்பதனால் முச்சக்கர வண்டி கட்டணத்தைக் குறைக்கும் தொகையை நினைத்துப் பார்க்க முடியாது என சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எனவே, இந்த நேரத்தில் முச்சக்கர வண்டி கட்டணங்களில் எந்தவிதமான கட்டண திருத்தமும் செய்யப்போவதில்லை என முடிவு செய்துள்ளதாக முச்சக்கர வண்டி சங்கங்கள் அறிவித்துள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
5 நாட்கள் முன்