கடும் பொருளாதார நெருக்கடி -தேநீர் அருந்துவதை குறைக்குமாறு அறிவிப்பு
Dilmah Tea
Pakistan
By Sumithiran
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள தினமும் அருந்தும் தேநீரின் அளவை குறைக்குமாறு பாகிஸ்தான் அரசாங்கம், அந்நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானே உலகில் மிக அதிகளவில் தேயிலையை இறக்குமதி செய்யும் நாடு என கருதப்படுகிறது.
தேயிலை இறக்குமதி
கடந்த ஆண்டு பாகிஸ்தான் சுமார் 600 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை இறக்குமதி செய்தது. பாகிஸ்தான் தற்போது கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என்பதுடன் அந்நிய செலாவணி கடுமையாக குறைந்துள்ளதால், இறக்குமதிகளுக்காக செலுத்த நிதி இல்லாத நிலைமை உருவாகியுள்ளது.
இதனால், தேநீர் அருந்துவதை குறைத்துக்கொள்ளுமாறும் தினமும் அருந்தும் தேநீர் கோப்பைகளின் எண்ணிக்கையை ஒன்று முதல் இரண்டு என்ற எண்ணிக்கையாக குறைத்துக்கொள்ளுமாறு பாகிஸ்தான் அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்