வைத்தியர்களின் சேவைக் காலத்தை நீடிப்பது தொடர்பில் வெளியான அறிவித்தல்
நாட்டின் சுகாதார சேவையில் ஏற்பட்டுள்ள சிக்கல்களை குறைக்கும் முயற்சியில், வைத்தியர்களின் சேவை காலத்தை நீடிப்பது தொடர்பிலான விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில், அரச சேவை விசேட வைத்தியர்கள் மற்றும் வைத்தியர்கள் 65 வயது வரை சேவையை நீடிக்க அனுமதி வழங்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந் நடவடிக்கை தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பொதுத்துறை ஊழியர்களின் ஒப்பந்தம்
பொதுத்துறை ஊழியர்களின் ஒப்பந்த அடிப்படையில் ஓய்வு வயது 60 ஆகும்.
இருப்பினும் புதிய பிரேரணையின்படி நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு 65 ஆண்டுகள் வரை மருத்துவர்கள் சேவையில் இருக்க புதிய ஒப்பந்தத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறி வரும் நிலையில் சுகாதார சேவை வீழ்ச்சியடைவதை தடுக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
