மட்டக்களப்பில் ஆசிரியரிடம் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளரின் அராஜகம் !
மட்டக்களப்பில் (Batticaloa) ஆசிரியரை தாக்க முற்பட்ட குற்றச்சாட்டில் தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலையிலையே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பாலர் பாடசாலை கட்டிடத்தை மாற்ற வேண்டும் என கோரி பாடசாலையில் வாக்குவாதத்தில், தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் அலெக்ஸ் என்பவர் ஈடுபட்டுள்ளார்.
இதையடுத்து, அப்பாடசாலை ஆசிரியை தாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் அவரை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிணையில் விடுதலை
இதன்பின்பு, நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை நீதவான் பிணையில் செல்ல அனுமதி அளித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் இருந்து குறித்த நபர் பட்டிருப்பு தொகுதியின் களுவாஞ்சிக்குடியில் உள்ள பிரதேச சபை, பிரதேச செயலகம், வைத்தியசாலை, அரச நிறுவனங்கள் மற்றும் நிர்வாகங்களில் தன்னிச்சையாக தலையிட்டு குழப்பங்களை உருவாக்கி வருவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள மக்களுடன் மதுபோதையில் அராஜகத்திலும் ஈடுபட்டு வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்