தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு

Vijitha Herath Government Of Sri Lanka National People's Power - NPP
By Jaso Nov 11, 2024 02:30 PM GMT
Report

வியாழன் அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை வெல்லும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் ஆனால் தேசிய ஐக்கியத்தை அடைவதற்காக தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களை வெல்வதில் தேசிய மக்கள் சக்தி 'மிகவும் நம்பிக்கையுடன்' இருப்பதாகவும் ஆனால் அரசியல் சூழலை வலுப்படுத்துவதற்காக தமிழ்,மற்றும் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைக்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஹேரத் கூறினார்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சிக்கு அழைப்பு இல்லை

எவ்வாறாயினும், தேசிய ஐக்கிய அரசாங்கத்திற்கான இந்த அழைப்பு இந்த சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படும், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு (UNP) அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு | Npp Ready For National Unity Govt

“தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்களுடன் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஆலோசிக்க நாங்கள் தயாராக உள்ளோம், ஏனெனில் இதன் மூலம் இந்த நாட்டில் நாம் இலக்காகக் கொண்ட தேசிய ஐக்கியத்தை உண்மையாகவே அடைய முடியும். எனினும் ஐக்கிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் வேலை செய்ய முடியும்" என்று ஹேரத் தெரிவித்தார்.

சுன்னாகத்தில் பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி தாக்குதல் - எடுக்கப்பட்ட நடவடிக்கை

சுன்னாகத்தில் பச்சிளம் குழந்தையை தூக்கி வீசி தாக்குதல் - எடுக்கப்பட்ட நடவடிக்கை

ஜனாதிபதி அநுரவின் நம்பிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(anura kumara dissanayake) கடந்த வாரங்களில் தனது நாடாளுமன்ற வேட்பாளர்களுக்கான பிரச்சார உரைகளில் நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறும் என நம்புவதாகக் குறிப்பிட்டு, இது வலுவான, சக்திவாய்ந்த அரசாங்கத்திற்கான நேரம், ஆனால் எதிர்க்கட்சிக்கான நேரம் அல்ல என்று கூறினார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு | Npp Ready For National Unity Govt

எவ்வாறாயினும், ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் பிரபல்யம் குறைந்துள்ளதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி மீதான மக்களின் எதிர்பார்ப்பு மிகவும் சிறப்பாக இருப்பதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்: ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம்: ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

ரணில் வலியுறுத்தும் விடயம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும்(ranil wickremesinghe) கடந்த வாரம் புதிய நாடாளுமன்றத்தில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனுபவம் வாய்ந்தவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

தேசிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் : அமைச்சர் விஜித ஹேரத் அதிரடி அறிவிப்பு | Npp Ready For National Unity Govt

வியாழக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைவதால், இரண்டு நாள் மௌன காலம் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நாடாளுமன்றம் நவம்பர் 21ஆம் திகதி கூடவுள்ளது.

புதிய அரசாங்கத்தின் சோசலிச கொள்கை தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லை! முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன்

புதிய அரசாங்கத்தின் சோசலிச கொள்கை தமிழ் மக்களுக்கு பொருத்தமில்லை! முன்னாள் எம்.பி சிவசக்தி ஆனந்தன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021