யாழில் ஒன்றரை மாத பெண் குழந்தை திடீரென உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் - கீரிமலையில் பிறந்து ஒன்றரை மாதங்களேயான பெண் குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.
கீரிமலை - நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் அனனிகா என்ற பெண் குழந்தையே நேற்றைய தினம் (15) இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த 23.03.2026 அன்று தாயொருவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.
யாழ் போதனா வைத்தியசாலை
அதில் ஒரு பெண் குழந்தைக்கு நேற்றையதினம் தாயார் பால் கரைத்து ஊட்டிய பின்னர் சிறிது நேரத்தில் குறித்த குழந்தை விறைத்துப்போய் காணப்பட்டது.

இந்நிலையில் குழந்தையை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |