வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது
arrested
gun
gamphaka
By Sumithiran
கம்பஹா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறப்பு அதிரடிப்படை வீரர் ஒருவர் துப்பாக்கி வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் பேரில் கம்பஹா காவல் நிலைய அதிகாரிகள் குழு இன்று அதிரடி சோதனை நடத்தியது.
கிடைத்த ஆதாரங்களின்படி, இராணுவ விசேட அதிரடிப் படையை விட்டு வெளியேறிய 44 வயதுடைய நபர், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட நுண்ணிய துப்பாக்கி, மற்றும் வெடிமருந்துகளுடன் கைது செய்யப்பட்டார்.
குறித்த துப்பாக்கியை அவர் அலுமாரியில் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் இவர் கம்பஹா காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.